Sunday, April 25, 2010

அது கரண்ட் கட் என்பது கட்டாயமாகிவிட்ட காலம்

நானும் என் நண்பர்களூம் வாடகை காரில் இரண்டாம் காட்சி சினிமாவிற்க்கு செல்வது வழக்கம், அப்போது இரவு நேரங்களில் வாடகை காரில் போலீசார் ரோந்து வருவதுண்டு. எங்களில் ஒருவன் எங்கு போவதாக இருந்தாலும் தாமதமாகவோ வருவான்

அன்றும் அது போல் நாங்கள் சினிமாவிற்கு செல்வதற்காக கார்வர தாமதமாகிவிட்டதால் காத்துக்கொண்டிருந்தோம்….

வழக்கம் போல் ரோந்து வந்த போலீசார் நாங்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் காரில் இருந்த படியெ எங்களை கலைந்து போகும்படி சொல்லிவிட்டு கார் புறப்படதயாரானபோது
எப்போதும் தாமதமாக வரும் எங்கள் நண்பன் தூரத்தில்ருந்து கார் புறப்படுவதை பார்த்துவிட்டு நாங்கள்தான் சினிமாவிற்க்கு புறப்படுகிறோம் என்று நினைத்துவிட்டு வோகமாக கையை தட்டி
நில்லுங்கள் நானும் வருகிறேன் என்பது போல் சைகை காண்பித்தான்

இதைபார்த்த போலிசார் அறண்டுபோய் காரை நிறுத்தினர்.. வேகமாக வந்த எங்கள் நண்பன் காரின் முன்பக்க கதவை திறந்து ஏறி அமர்ந்து கொண்டு வேகமாக கார்கதவை அடைத்து விட்டு போகட்டும் என்றான்.

(பிறகு என்ன நடந்தது என்ன என்றூ எங்கள் நண்பன் சொன்னது)

கார் நகரத்தொடங்கி சிறிதுநேரம்வரை எந்த சலனமும் இல்லாமல் எல்லோரும் அமைதியாக இருந்தனர், பின்பு திரும்பிப்பார்த்தால் எல்லாம் போலீஸ் முகங்கள்…..எல்லோரும் இவனை ஒரு தைரியம் கலந்த பயத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். இவன் சுதாரித்துகொண்டு விசயத்தை சொல்லியிருக்கிறான். எல்லோரும் சிரிக்க இவன் பக்கத்திலுருந்த போலிஸ் நன்றாக பயந்திருக்க வேண்டும் அவர் இவன் காதை திருகி ஒரு அடியும் கொடுத்து ஜங்ஷனில் இறக்கிவிட்டிருக்கிறார்.

இது நிஜத்தை தழுவிய கற்பனை..
B M ஸெய்னுத்தீன்

No comments:

Post a Comment