Saturday, April 16, 2011

என் கனவுலக நண்பர்களே!


காதல் தேசத்தில் கொடிபிடிக்கும்....
என் கனவுலக நண்பர்களே!
உங்கள் கொடியின் சிகப்புக்கலரை
நீக்கிவிடுங்கள்...அது
உங்களுக்கு வலியிருந்து
விடுதலைதரும்.....

வலிக்கும் போதுதான் ..
இங்கு சில காதல்கள்...
இனிக்கிறது...
அதிக இனிப்பு என்பதின் முடிவு...
தித்திப்பே...
அதிகம் தித்திக்காத காதலே..
சாலச்சிறந்தது

இன்று வலிக்கும்
காதலலெல்லாம்..
சிந்திக்காமல் ஒரு நொடியில்
சிதறவிட்ட மனதின்
சின்ன சிணுங்கல்களே!

அது அழுகையையாய் ஆர்ப்பரிக்கும் முன்…
அதனால் அனுபவிக்கும்
இனிமையை மட்டும்…
மெதுவாய் மென்று முழுங்குங்கள்..

மகிழ்ச்சியை வாழ்க்கையிலிருந்து
பிரித்தெடுக்க பழகுங்கள்
வலிகளை மட்டும் நிரந்தரமாய் சுவாசித்து…
வாழ்க்கையை ரணப்படுத்த வேண்டாம்..

No comments:

Post a Comment