Saturday, January 12, 2013

குண்டூசி


வாப்பும்மா கண்விழித்த போது முதலில் கண்ணில் பட்டது குளுக்கோஸ் ஸ்டாண்டு அப்புறம்தான் கவனித்தாள், தான் ஹாஸ்பிட்டலில் படுத்திருக்கிறோம் என்று, உற்றாரும் உறவினரும் சுற்றி நிற்க்க வாப்பும்மா குழப்பத்தில் மேல் கூரையில் விழுமா விழாதா என கர்ண கொடுர சப்தத்துடன் கிறங்க்கும் அந்த பழைய காலத்து பேனை உத்து நேக்கிய படி எதையோ மனதில் போட்டு குழப்பி யோசித்துக் கொண்டிருந்தாள்….

எனக்கு என்ன நேர்ந்தது… ம்ம்… கடையாக அந்த அறையை தூத்ததும், அப்போது கண்ணில் பட்ட அந்த சின்ன குண்டூசியை கையில் எடுத்ததும், இதை எங்கே வைக்கலாம் என்று நினத்தனும்… அதை எங்கோ பத்திரமாய வைத்தும்.. அதன் பின்பு என்ன நடந்தது என்று எதுவுமே ஞாபகமில்லை.

கரண்டு அதிக நேரம் தொலைந்து போவதோடு இரவு நேரங்களில் அதிக நாட்களில் கரண்டு போனவுடன் முழிப்பு வந்து விட்டால் அப்புறம் தூங்க முடியாமல் சுப்ஹூவரை முழித்து கிடப்பதே வாடிக்கையாவிட்டது வாப்பும்மாவுக்கு.

இன்று ஞாயிற்றுக் கிழமை பேரப்பிள்ளைகள் வீட்டில் நிற்க்கும் நாள்,

இன்றைக்கு கடைக்குட்டி பேரனை சரிக்கட்டி வேண்டாத சாதனங்களை வேண்டும் என்று சாக்கு முட்டைக்குள் போட்டு கூட்டி வைத்திருக்கும் அந்த பூட்டிக் கிடக்கும் அறையை கிளீன் பண்ணினால், இரவில் அங்கு தூங்கலாம் அந்த அறையின் ஜன்னலை திறந்தால் வேப்பமரத்திலிருந்து வரும் காற்று மட்டுமே போதும் கரண்டு வேண்டாம், காற்றாடி ஓட என்று முடிவு பண்ணி.

பேரனிடம் ” நீ மத்தியானம் சாப்பிட்டுட்டு எங்க போற ? “

”ஏன்… இப்ப எதுக்கு கேக்க…?”

“எனக்கு நீ ஒரு உபகாரம் செய்யனும்”

“எனக்குத் தெரியும், என்ன உபகாரம்ன்னு உன்ன கொண்டு போயி சின்னம்மா வீட்ல விடனும் அதுதானே… அதெல்லாம் முடியாது நான் பிரண்ஸோட சினிமா போறேன், ஏற்கனவே எல்லாவண்டையும் சொல்லியாச்சு, நீ இடையில வந்து குழப்பாதே.. ”

”மோனே… நீ சாயங்காலம் படத்துக்குப் போ! நான் பைசா தாரேன் வரும் போது உனக்கு என்ன வேணுமே சாப்பிட்டுக்கோ எங்களுக்கு ஆரியபவன் - ல இட்லி வாங்கிட்டு வா…, அதுகுள்ள நாம் ரெண்டு பேருமா அந்த படிக்கட்டு பக்கமுள்ள ரூமை கிளீன் பண்ணிரலாம்”

ஏற்கனவே படம்பார்க்கவே பட்ஜட்ல பைசா இல்லாம பசங்ககிட்ட அட்ஜெட்ஸ் பண்ணலாம் என்றிருந்த பேரனுக்கு “வாப்பும்மாவின் இந்த டீல் ரெம்ப புடிச்சிருந்தது “ இன்ன வாரேன்னு பைக்கை எடுத்துட்டு பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயி விசயத்தை சொல்லி முதல் காட்சி படத்துக்கு போகலாம் என்று முடிவு பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்து வரிந்துகட்டிக் கொண்டு ரெடியானான் வாப்பும்மாவுடன் ருமை கிளீன்பண்ண….

வாப்பும்மா, வின் தடாலடி உத்தரவுகளால் திக்குகுக்காடி போனாதாலும் இதத்தூக்கு, அதத்தூக்கு என்று குறுக்கு முறிய வேலை வாங்கினாதாலும் பீரிட்டு வந்த கோபத்தை பாரத் புரோட்டா ஸ்டாலின் “பரோட்டா, கொத்துச் சிக்கன்” ஆசை வந்து சமாதப்படுத்த பல்லை கடித்துக் கொண்டு கடிவாளம் பூட்டிய குதிரை மாதிரி எல்லாவற்றை கேட்டு ஒரு வழியாக அந்த அறையில் கூடிக்கிடந்த சாதனங்களை அட்டைப் பெட்டியில் அடுக்கி வேறு இடத்துக்கு மாற்றியாகிவிட்டது இனி மிச்சம் தூசியாக கிடக்கும் தரையை தூத்து(பெருக்கி) சரி செய்ய வேண்டும், அதை வாப்பும்மா நான் செய்கிறேன் என்று ஏற்றுக் கொண்டதால்…

“சரி ருவா.. எடு நேரமாச்சு நான் போறேன்! “ வாப்பும்மா கொடுத்த ரூவாவை வாங்கிக் கொண்டு ஒரு குளி போட்டுட்டு பிரெஸ்ஸா படத்துக்கு போகலாமென்று வீட்டின் பின்பாகத்து குளியறைக்கு ஓடினான்.

அதன் பின்பு நடந்ததுதான் அது…..

வாப்பும்மா.. வாருலயும் குப்பதட்டையும் எடுத்துட்டு ரூமை பெருக்கத்துவங்கினாள்.. அப்போது கண்ணில் பட்டது அந்த “குண்டூசி” அதை எடுத்த வாப்பும்மா இதை எங்க வக்க யாருக்கு காலுலையும் குத்திரகூடதே என்று பத்திரமாய் வைத்த இடம் “ப்ளக் பாயிண்டின் ஓட்டையில்” அப்போது கரண்டு இருந்ததால் இப்போது வாப்பும்மா ஹாஸ்பிட்டலில்.

சுற்றி நின்ற கூட்டத்தில் படம் பார்க்கப் போகாமல் கடைக்குட்டி பேரனும், வாப்பும்மாவின் நிலை பார்த்து கண்களில் நீர் தழும்ப...

No comments:

Post a Comment