Saturday, January 12, 2013

இறையருளால்...!!

நசுக்க நினைத்ததெல்லாம்
பஞ்சு மூட்டைகளாலல்ல
பாறைகளால்... ஆனாலும்
இறையருளால் துளைத்தே
துளிர்விடுகிறோம்

மைல் கற்களெல்லாம்
பக்கத்தில் நடப்பட்டதல்ல
வெகுதூரத்தில் பதிக்கப்பட்டவை
இறையருளால் களைக்காமல்
நடக்கிறோம்

சுற்றி இருப்பது
சுத்தமான காற்றல்ல
அசுத்தம் கலந்த வாய்வு
இறையருளால் பிரித்தே
சுவாசிக்கிறோம்

சங்கங்கடங்களில்லாமல்
சந்தோசம் மட்டுமே
நிறைந்த வாழ்க்கை
சலித்துப் போகும்
இறையருளால் கலந்தே
வாழ்கிறோம்.

No comments:

Post a Comment