Tuesday, December 27, 2011

பூக்களை நேசிக்காதவன்???














பூக்களை நேசிக்காதவன்
காதலிக்க முடியுமா.?
காதலை விரும்பாதவன்
பூக்களை நேசிப்பான்


செடியில் இருந்தால் செடிக்கு அழகு
தலையில் சூடினால் பெண்ணுக்கு அழகு
கூடையில் வைத்தால் கூடைக்கு அழகு
கூடையை கூடத்தில் வைத்தால்
கூடத்திற்க்கே அழகு..

பூக்களில்லாத முதலிரவு
சிரிக்காத பெண்ணிடம் சில்மிசம்
செய்வது போல்..
பூக்களில்லாத திருமணம்.
முத்தமிடாத முதலிரவுபோல். 


பனியில் பூக்கள் காலைக்கு அழகு
மாலையில் பூக்கள் மகளுக்கு அழகு
இரவில் பூக்கள் மனைவிக்கு அழஹோ... அழகு.

ஆடம்பரங்களின் அணிவகுப்பு..


















அணிகலன் கூட
அளவாய் அணியும் போது
அழகாய்தானிருக்கும்

ஆனால்
அது அதிகமானால்...

ஆடம்பரங்களின்
அணிவகுப்பில்
முதல் வரிசையில்
மேல்தட்டு மணமகள்.

பந்தியில் பப்படம்
விளம்பினால் கைவலிக்கும்
என்று தடுத்த தாய்
கவலைப்படுகிறாள்..
பத்து கிலோ தங்கம்
சுமக்கும் மகளை பார்த்து
பத்தாதோ என்று.

தன் மகளை
பணக்காரனின் வாரிசு
என்று பலருக்கு பறைச்சாற்ற
ஒரு முட்டாள்
உண்ணாமல் உறங்காமல்
உண்டாக்கியது

அதிகம் தங்கம்
கொடுத்தால்தால் அன்பாய்
அரவணைப்பான் என்றால்
அட அறிவு கெட்டவர்களே
அவன் அரவணைப்பான்
உன் தங்கத்தையல்ல
அவள் அணியும் தங்கத்தை.

தங்கத்தை மட்டுமே
நேசிப்பவனுக்கு
தாரைவார்தால்
தனியாக வந்து நிற்பாள்
தங்கம் தீர்ந்தபிறகு.

தன்மகளை நிஜமாய் நேசிக்கும்
என் சக நண்பர்களே!
உங்கள் மகளுக்கான
மாப்பிள்ளை தேர்வில்
தேடுங்கள்
மகளை நேசிக்க
நிஜ மகர் கொடுக்கும்
மருமகனை

அவன் அவளை
ஹனிமூனுக்கு ஹவ்வாய் க்கு
அழைத்துச் செல்பவனா? என்று
அலசும் நீங்கள்
அச்சப்படுங்கள் அல்லாஹ்விற்க்கு
அறியுங்கள்....
மறுமையில் சொர்க்கத்துக்கு
அழைத்து செல்வானா என...