Saturday, January 12, 2013

எரியும் ரோஜாக்கள்

தன் வீட்டு ரோஜா செடிகளுக்கு
தண்ணீர் ஊற்ற பொட்ரோல் தேசத்து
எண்ணெய்கிணறுகளில்
எரியும் ரோஜாக்கள்

கண்ணீரோடு தண்ணீர் தேடி
விமானம் ஏறும் முன்பு
பலரும் முயற்ச்சிப்பதில்லை
தன் தோட்டத்தில்
தானே ஒரு கிணறு தோண்ட...

ஞாயிற்றுக் கிழமை மட்டன் கறி
வெள்ளிக் கிழமை பிரியாணி
விக்கலில்லாம் முழுங்கும் போது
யாரும் நினைப்பதில்லை
தன் வீட்டு குடிமகனின்
குடி கெட்டுக்கொண்டிருப்பதை

சாப்பிடும் சமயத்து நினைவுப்பிறழலில்
சிறுமூளைக்கும் பெரும் மூளைக்குமான
சண்டை சச்சரவில் மூட மறந்த
உள் நாட்டு சங்கதியின்
புரையேற்றங்களில்
மனைவி நினைப்பதாய்
மகிழும் போது…
புது சாரியின் பார்டருக்கு
மேட்சாய் சட்டைத்துணியில்லை...
கவலைப்படும் மனைவி!

வரதட்சணை விரும்பிகளுக்கு
தங்கையை தாரை வார்ததபோது
அவள் கழுத்தில் தொங்குகிறது
மொழுவர்த்தி வெளிச்சத்தில்
உருக்கிய தங்கம்

புதிதாய் கட்டிய வீட்டில்
பால் காய்ச்சும் நெருப்பில்
இளமைகளும்
எரிந்துகொண்டிருக்கிறது

உற்றாரும் உறவினரும்
உயிரோடிந்தாலும்
லேசான தலைவலிக்கும்
கடுமையான காய்ச்சலுக்கும்
ரூம்மெட்தான்….
அம்மையும் அப்பனும்
மனைவியும் பிள்ளைகளும்

கடைசி நேரத்தில் எழுந்து
கண்டதை அணிந்து
கால்கடுக்க ஓடும் போது மனதில்..
வெள்ளை வேட்டியும்
சலவைச் சட்டையும்
பூரூட் மணமுமாய்
களித்திருந்த
வெள்ளிக் கிழமை ஜீம்மாக்கள்

உறக்கம் வராத இரவுகளில்
ஆசையாய் அணைத்துக் கொள்ள
இன்னுமொரு தலையணைகூட இல்லை
ஊருக்குப் போகும் போது
காலுக்கு என்று தேடித்தேடி
வாங்கிய டிசைன் போட்ட
தலையணைகள்

பால் வார்க்க பாலையில் யாருமில்லை
விம்மலும் முனங்கல்களோடும்
முடிந்து போகிறது அன்றைய தினங்கள்

மொழுகுவர்த்திகள் ஏற்றுமதி நின்றபடில்லை
ஏர் போர்ட் போக ரெடியாகும் தோழன்
தன் வீட்டு ரோஜா செடிகளுக்கு தண்ணீர் உற்ற
வேனல் அடுப்புகளுக்கு விறகு ஆக...
இன்றைய விமானத்தில்
முதுமையில் திரும்பிச் செல்ல
இளைமையில் வருகிறது ஒரு புதிய ரோஜா!

கண்ணீரோடு தண்ணீர் தேடி
விமானம் ஏறும் முன்பு
பலரும் முயற்ச்சிப்பதில்லை
தன் தோட்டத்தில்
தானே ஒரு கிணறு தோண்ட…

இந்த பஸ் எங்க போவு...?


மல்லிகை பூவும், மரிக்கொழுந்து வாசமும் மணமணக்கும் நாகர்கோவில் நேசமணி பஸ் நிற்க்கும் அண்ணா பஸ் நிலையத்தின் மாலைப் பொழுது.

7D பள்ளியாடி பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த பெஞ்சில் ஒரு பாட்டி, வெத்திலை மென்று சுவரெங்கும் துப்பும் ரகம். ஒவ்வோரு பஸ் வந்து அந்த பகுதியில் நிறுத்தும் போதும். பக்கத்தில் போவோரிடம்

“இந்த பஸ் எங்க போவு? “ என்று கேட்டுக் கொள்வார்.

என்னிடமும் இரண்டு மூன்று முறை கேட்டாகிவிட்டது, நானும் அலுக்காமல் “பூதப்பாண்டி, திங்கட் சந்தை, குளச்சல் என்று சொல்லி அலுத்து விட்டேன், நான் அலுத்து போனதை முகத்திலும் காட்ட பாட்டி என்னிடம் கேட்பதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்

வழக்கம் போல் நான் காத்து நிற்க்கும் பஸ் தாமதமாக வந்து அடித்து முடித்து ஏற முற்பட்டோர் எல்லோரிடமும். பஸ் கொஞ்சம் தாமதாமாகத்தன் போகும் என்று கண்டக்டர் சொல்ல, காத்திருந்தவர்கள் மீண்டும் காத்திருக்க, கூட்ட நெரிசலில் முந்தியடிப்பவர் வேகத்தை குறைந்துக் கொண்டார்கள்.

எனக்கும் நண்பர்களுக்கும் பஸ் புறப்படும் நேரம் மட்டும் ஒரு இரண்டு ஸ்டெப் ஓடி போய் ஏறும் பழக்கம், அப்படி ஏறாமல் நேரமே இடம் பிடித்து உள்ளே போய் உட்கார்ந்திருந்தால் என் இளமைக்கான யோக்கியதை குறைந்து விடும் என எண்ணியதே அதற்க்கு காரணம்.

எனவே, நேரத்தை போக்க வேடிக்கை பார்ப்பது போல்….
காலையில் வைத்த ரோஜா வும் மல்லிகையும் பிச்சியும் கசங்கி அதன் மணம் அத்தனையும் கல்லூரியின் வகுப்பறைகளாலும், வராந்தாக்களாலும், நுகரப்பட்டதால் கதம்ப மணமிழந்து வாடித் தொங்கும் கூந்தல்களுக்கு சொந்தக்காரிகளான என் சக மங்கையர்கரசிகள் உலாத்திக் கொண்டும் உட்கார்ந்து கொண்டுமிருந்தார்கள்.

அவர்களில் பலர் என்னை ஏறெடுத்தும் பார்ககவில்லை என்றாலும் நான் பராபட்சமின்றி அவர்கள் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்தேன், என்னுடன் வேலைப் பார்க்கும் சில முகங்கழும், அதில் உண்டு என்பதால் கொஞ்சம் அடக்கியிம் வாசித்துக் கொண்டிருந்தேன். அதுதான் உண்மையாக இருந்திருக்க வேண்டும்.

என்றாலும் அவ்வப்போது பக்கத்து பாட்டியையும் ஒரு கண் பார்க்கத்தவறுவதில்லை, காரணம், பாட்டிக்கான பஸ் வந்ததா என்ற அக்கரையே..!

எல்லா பஸ்ஸும் வருவதும் போவதுமாக இருக்க பாட்டியின் ஊருக்கு போகும் பஸ் வேறு பகுதியில் நிற்க்குமோ! என்று எனக்குள் எழுந்த சந்தேகத்தால் பாட்டியிடம் சென்று உங்களுக்கு எங்க போகணும் என்றேன்…

பாட்டி போட்ட போடு, என்னை தூக்கி வாரிப் போட்டது…

பாட்டி அமைதியாக சொன்னாள் மக்கா… எனக்கு வடசேரி போகணும் என்று.

நான் சொன்னேன் இங்கு வந்து சென்ற எல்லா பஸ்ஸூம் “வடசேரி” போய்த்தானே போகும் என்று, பாட்டியோ…

பாழாய்ப் போனவனே உங்கிட்டயும் எத்தனை தடவை கேட்டேன்.

”இந்த பஸ்ஸு வடசேரி போகும்ன்னு” நீ சொல்லவேயில்லையே?

பாட்டியிடம் நான் கேட்டேன்

“வடசேரி” தான் போகனும்னு நீங்களும் சொல்லவேயில்லையே…!!!

சற்றும் நேரம் மொனமாக இருந்த பாட்டி தன் தவறை புரிந்திருக்க வேண்டும்… நான் போக வேண்டிய பஸ்ஸைக் காட்டி

இது ”வடசேரி” போகுமா என்று இந்த முறை சரியாகக் கேட்டார்..!!!

இறையருளால்...!!

நசுக்க நினைத்ததெல்லாம்
பஞ்சு மூட்டைகளாலல்ல
பாறைகளால்... ஆனாலும்
இறையருளால் துளைத்தே
துளிர்விடுகிறோம்

மைல் கற்களெல்லாம்
பக்கத்தில் நடப்பட்டதல்ல
வெகுதூரத்தில் பதிக்கப்பட்டவை
இறையருளால் களைக்காமல்
நடக்கிறோம்

சுற்றி இருப்பது
சுத்தமான காற்றல்ல
அசுத்தம் கலந்த வாய்வு
இறையருளால் பிரித்தே
சுவாசிக்கிறோம்

சங்கங்கடங்களில்லாமல்
சந்தோசம் மட்டுமே
நிறைந்த வாழ்க்கை
சலித்துப் போகும்
இறையருளால் கலந்தே
வாழ்கிறோம்.

குண்டூசி


வாப்பும்மா கண்விழித்த போது முதலில் கண்ணில் பட்டது குளுக்கோஸ் ஸ்டாண்டு அப்புறம்தான் கவனித்தாள், தான் ஹாஸ்பிட்டலில் படுத்திருக்கிறோம் என்று, உற்றாரும் உறவினரும் சுற்றி நிற்க்க வாப்பும்மா குழப்பத்தில் மேல் கூரையில் விழுமா விழாதா என கர்ண கொடுர சப்தத்துடன் கிறங்க்கும் அந்த பழைய காலத்து பேனை உத்து நேக்கிய படி எதையோ மனதில் போட்டு குழப்பி யோசித்துக் கொண்டிருந்தாள்….

எனக்கு என்ன நேர்ந்தது… ம்ம்… கடையாக அந்த அறையை தூத்ததும், அப்போது கண்ணில் பட்ட அந்த சின்ன குண்டூசியை கையில் எடுத்ததும், இதை எங்கே வைக்கலாம் என்று நினத்தனும்… அதை எங்கோ பத்திரமாய வைத்தும்.. அதன் பின்பு என்ன நடந்தது என்று எதுவுமே ஞாபகமில்லை.

கரண்டு அதிக நேரம் தொலைந்து போவதோடு இரவு நேரங்களில் அதிக நாட்களில் கரண்டு போனவுடன் முழிப்பு வந்து விட்டால் அப்புறம் தூங்க முடியாமல் சுப்ஹூவரை முழித்து கிடப்பதே வாடிக்கையாவிட்டது வாப்பும்மாவுக்கு.

இன்று ஞாயிற்றுக் கிழமை பேரப்பிள்ளைகள் வீட்டில் நிற்க்கும் நாள்,

இன்றைக்கு கடைக்குட்டி பேரனை சரிக்கட்டி வேண்டாத சாதனங்களை வேண்டும் என்று சாக்கு முட்டைக்குள் போட்டு கூட்டி வைத்திருக்கும் அந்த பூட்டிக் கிடக்கும் அறையை கிளீன் பண்ணினால், இரவில் அங்கு தூங்கலாம் அந்த அறையின் ஜன்னலை திறந்தால் வேப்பமரத்திலிருந்து வரும் காற்று மட்டுமே போதும் கரண்டு வேண்டாம், காற்றாடி ஓட என்று முடிவு பண்ணி.

பேரனிடம் ” நீ மத்தியானம் சாப்பிட்டுட்டு எங்க போற ? “

”ஏன்… இப்ப எதுக்கு கேக்க…?”

“எனக்கு நீ ஒரு உபகாரம் செய்யனும்”

“எனக்குத் தெரியும், என்ன உபகாரம்ன்னு உன்ன கொண்டு போயி சின்னம்மா வீட்ல விடனும் அதுதானே… அதெல்லாம் முடியாது நான் பிரண்ஸோட சினிமா போறேன், ஏற்கனவே எல்லாவண்டையும் சொல்லியாச்சு, நீ இடையில வந்து குழப்பாதே.. ”

”மோனே… நீ சாயங்காலம் படத்துக்குப் போ! நான் பைசா தாரேன் வரும் போது உனக்கு என்ன வேணுமே சாப்பிட்டுக்கோ எங்களுக்கு ஆரியபவன் - ல இட்லி வாங்கிட்டு வா…, அதுகுள்ள நாம் ரெண்டு பேருமா அந்த படிக்கட்டு பக்கமுள்ள ரூமை கிளீன் பண்ணிரலாம்”

ஏற்கனவே படம்பார்க்கவே பட்ஜட்ல பைசா இல்லாம பசங்ககிட்ட அட்ஜெட்ஸ் பண்ணலாம் என்றிருந்த பேரனுக்கு “வாப்பும்மாவின் இந்த டீல் ரெம்ப புடிச்சிருந்தது “ இன்ன வாரேன்னு பைக்கை எடுத்துட்டு பிரண்ட்ஸ் வீட்டுக்கு போயி விசயத்தை சொல்லி முதல் காட்சி படத்துக்கு போகலாம் என்று முடிவு பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்து வரிந்துகட்டிக் கொண்டு ரெடியானான் வாப்பும்மாவுடன் ருமை கிளீன்பண்ண….

வாப்பும்மா, வின் தடாலடி உத்தரவுகளால் திக்குகுக்காடி போனாதாலும் இதத்தூக்கு, அதத்தூக்கு என்று குறுக்கு முறிய வேலை வாங்கினாதாலும் பீரிட்டு வந்த கோபத்தை பாரத் புரோட்டா ஸ்டாலின் “பரோட்டா, கொத்துச் சிக்கன்” ஆசை வந்து சமாதப்படுத்த பல்லை கடித்துக் கொண்டு கடிவாளம் பூட்டிய குதிரை மாதிரி எல்லாவற்றை கேட்டு ஒரு வழியாக அந்த அறையில் கூடிக்கிடந்த சாதனங்களை அட்டைப் பெட்டியில் அடுக்கி வேறு இடத்துக்கு மாற்றியாகிவிட்டது இனி மிச்சம் தூசியாக கிடக்கும் தரையை தூத்து(பெருக்கி) சரி செய்ய வேண்டும், அதை வாப்பும்மா நான் செய்கிறேன் என்று ஏற்றுக் கொண்டதால்…

“சரி ருவா.. எடு நேரமாச்சு நான் போறேன்! “ வாப்பும்மா கொடுத்த ரூவாவை வாங்கிக் கொண்டு ஒரு குளி போட்டுட்டு பிரெஸ்ஸா படத்துக்கு போகலாமென்று வீட்டின் பின்பாகத்து குளியறைக்கு ஓடினான்.

அதன் பின்பு நடந்ததுதான் அது…..

வாப்பும்மா.. வாருலயும் குப்பதட்டையும் எடுத்துட்டு ரூமை பெருக்கத்துவங்கினாள்.. அப்போது கண்ணில் பட்டது அந்த “குண்டூசி” அதை எடுத்த வாப்பும்மா இதை எங்க வக்க யாருக்கு காலுலையும் குத்திரகூடதே என்று பத்திரமாய் வைத்த இடம் “ப்ளக் பாயிண்டின் ஓட்டையில்” அப்போது கரண்டு இருந்ததால் இப்போது வாப்பும்மா ஹாஸ்பிட்டலில்.

சுற்றி நின்ற கூட்டத்தில் படம் பார்க்கப் போகாமல் கடைக்குட்டி பேரனும், வாப்பும்மாவின் நிலை பார்த்து கண்களில் நீர் தழும்ப...