Tuesday, December 4, 2012

வெந்து போன சிறகுகள்!

நான் கவிதைகள்
கிறுக்கத் துவங்கியதன்
காரணமே நீதான்...

நீ என் கவிதைகளை
சுவாசிக்கும் போது...
உன் கன்னக் குழிகளின்
சிரிப்பில் விழவே!

நாம் இதயங்களை இடமாற்றம்
செய்து கொண்டபோது
உலகமே எனக்கு வசப்பட்டதாய்
உணர்ந்து நெகிழ்ந்தது
இன்றும் நினைவில்...

தாண்டமுடியாத உயரங்களை
இலகுவாய்த் தாண்டினேன்
நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய்
என்பதற்க்காக…

விண்ணை கூட தொட்டிருப்பேன்
நீ நிலா வேண்டும் என்று
அடம் பிடித்திருந்தால்….

வீசும் தென்றலும்
விண்மீன் அழகும்
பூவின் மணமும்
எனக்கு இரண்டாமாயிற்று
உன் அருகாமையில்
அகப்படும் போது

குழந்தையின் முதல்
உச்சரிப்புக்கு காத்திருக்கும்
தாய்போல்
காத்திருந்திருக்கிறேன் - உன்
காதல் கடிதங்களின்
கனவுச் சொற்களை
கண்டு மகிழ…..

தலை நிமிர்ந்து வாழ்ந்த நான்
ஒவ்வொருமுறையும்
என் அறையின்
கதவுகள் திறக்கும் போதும்
தபால்காரன் வீசி விட்டு போன
உன் கடிதங்கள் தேடி
தலை குனிந்திருக்கிறேன்

உன்னையே அடைந்து
உவகையாய் வாழ!
உறுதியாய் நானிருந்தேன்
உன்னில் உறுதி அதை
உறுதி செய்யாதால்
உமையாய் அழுகிறேன்
உன்னோடில்லாமல்…

நீல வானத்தை
நீ எனக்கு
அறிமுகப்படுதியபோது
வேகமாய் வளர்ந்த சிறகுகள்
வெந்து போனது
உறுதியில்லாமல்
கசிந்த உன் காதலின்
வேனல் காற்றில்

ஆனாலும்...
மெய்யான உன் நினைவுகள்

எனக்குள் பொய்யாது
பெய்கிறது அவ்வப்போது
கவிதை மழையாய்...

No comments:

Post a Comment