தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லை என்றால்
உற்றாருக்கும்
உறவுக்கும் கவலையில்லை
ஜெகத்தினை
அழித்திடுவேன்
என்றவனின் கல்லறை
காடுபிடித்து
காணமல் போய் விட்டது
மனிதாபிமானமுள்ள மனிதம்
வெட்கித்தலை
குனிய மறுத்து
கண்டதை
காணவில்லை என்று
மனசாட்சி
மறக்கிறது
பூனை
தூங்கும்
அண்டை வீட்டின்
அடுப்படி
மறந்து
ஆடம்பரமாய்
விருந்து வைத்த
அனுபவம்
சொல்கிறான்
பக்கத்து
வீட்டு பசியாளியுடம்
இங்கே!
மனிதம்
மதித்து
பாதங்களுக்கு
தன் செருப்பை
வழங்கும்
பாரின்காரர்...
மனிதன்
இன்னும்
வாழ்கிறான்
என்று
ஆனந்த
அழுகையில்
என் தேசத்து
ஏழை…
இனி
என்ன பெருமையடா உனக்கு
உலக பணக்காரர்களில்
சிலர்
என் நாட்டில் உண்டு என்று….
No comments:
Post a Comment