Wednesday, November 28, 2012

அல்வா..!!

(ஒரு குட்டி காமெடி(?)க் கதை)

உம்மம்மாவுக்கு அந்த செம்பு பூண் போட்ட உலக்கையில் சம்பந்தி அரச்சாத்தான் சோறே உள்ள இறங்கும். சம்பந்தி அரச்ச கையோடு அதை கழுவி துடைச்சு பத்திரமா சாய்ப்பு மூலைல வக்கலைன்ன என்னவோ போலிருக்கும்.

மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் வந்த பிறகும் இன்னும் ம்மம்மா அந்த உலக்கையில் அரச்ச சம்மந்தியில்லைன்ன சாப்பிடும் இடத்த
இரண்டாக்காம்ம இருந்ததேயில்ல.

என்னைக்காவது ஒரு நாள் கொஞ்சம் சோம்பிப்போயி மிக்ஸில சம்மந்தி அரச்சுக் கொடுத்தா, அன்றைக்கு மட்டன் பிரியாணி இருந்தாக் கூட எனக்கொண்ணும் வேணாம் என்று உள் குத்தில் குத்தி ஆயிரம் பேசுவாள். சம்மந்திக்கு பிறகு ம்மம்மாவுக்கு பிடித்தது அல்வா, இந்த வயசிலும் அல்வான்னு சொன்னாலே ”எங்கல மக்கா” ன்னு கேட்டு கொதியேட தன் பொக்க வாய் அழகில் சிரிப்பா.

பேரனுக்கு கல்யாணம்…!

சிறப்பாய் நடந்து முடிந்தது, மனைவிடன் வீட்டுக்கு வந்த பேரன் கூடவே கொண்டு வந்தான் உம்மம்மாவுக்கு வில்லங்கத்தையும், அதுவும் ம்மம்மா தானே இழுத்துப் போட்டுக் கொண்ட வில்லங்கம்.

கல்யாண பேச்சு எடுத்த நாளிலிருந்தே, சீர் வரிசைக்கு என்னென்ன வேணும் என்ற லிஸ்ட் தயாரிப்பில் மூம்மூரமாக இருந்த ம்மம்மா தீர்மானமாய் சொன்னது செம்பு உருளியிம் அந்த உருளி நிறச்சு அல்வாவும்.

மம்மமாவின் தீர்மானம் தீக்கப்படலைன்ன, உள்குத்தில் பேசி அது அவள் கடைசி நாள் வரை நீண்டு, அது வீட்டின் கடைசி பேரன் வரை காதடைக்க வைக்கும். எனவே கண்டிப்பாய் சொன்னதால், கல்யாணம் முடிந்த அன்று பெண்ணை அனுப்பும் போது கூடவே பெண் வீட்டார் ஒரு புதிய உருளி நிறைய அல்வாவவும் கிண்டி கொடுத்து விட்டார்கள்.

வீட்டின் மூலையில் வைக்கப்பட்ட அந்த அல்வா உருளி எல்லோரையும் உசுப்பேத்திக் கொண்டே இருந்தது மறுநாள் மாலைவரை,

கூடவே வந்த செந்துளுவன் குலையும், மையும், சந்தணமும் தேய்ச்சு வந்த வெத்திலையும் கல்யாண வீட்டின் களையை கூட்டியதோடு அதன் மணத்தோடு, மல்லிகைப்பூ வாடிய வாசனையும் சேர்ந்து ஒரு வித மயக்கத்தை அங்கு வருவோருக்கு உண்டாக்கியது.

ம்மாம்மாவுக்கு எந்த மணமும் அடிக்கவில்லை ஆனால் அல்வா வின் மணம் மட்டும் தெளிவாக மிக மிக தெளிவாக மூக்கை நுழைத்து நோண்டிக் கொண்டே இருந்ததால், பல தடவை சொல்லிப் பார்த்து விட்டாள் பலரிடம், யாரும் அந்த அல்வாவில் ஒரு பீஸ் வெட்டிக் கொடுக்கவில்லை.

மறுநாள் கல்யாண வீட்டின் களைகள் கொஞ்சம் குறைந்து, நெருங்கிய உறவினர்கள் மட்டும் இருந்த அந்த சபையில் “சீர் வரிசையாக வந்த பொருட்களை” தன் பெருமையை பறைசாட்டும் விதாமக அடிக்கி வைக்கப்பட்டு இருக்க. உண்மையில் அல்வா மணம் மட்டும் ஒரு படி மேல் வந்து எல்லோரின் ஆர்வத்தையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது, குறிப்பாக ம்மம்மாவுக்கு.

அந்த தருணம் வந்தது வாளையிலை கொண்டு மூடப்பட்டு வாழை நார் கொண்டு கட்டியிருந்த அதன் அகன்ற வாய்கட்டை யாரோ , பிரித்தெடுக்க… வாழையிலிருந்து நெய் கீழே கொட்டியது.

பொறுமையிழந்த ம்மம்மா மக்கா அந்த வாழையிலையை இங்க தா என்று வாங்கி அதை மோந்து பாத்து ம்…ம்… என்று அந்த வாசனையில் சொக்கிப் போய் அல்வாவை தின்னும் ஆர்வத்துடன் உருளியை பார்த்தாள்…

அல்வா…!, குங்குமப்பூ கலரில் நெய்வடிய தழதழ என உருளியில் திரண்டு கிடந்தது, மேலே முந்திரிப் பருப்பு பென்னிறத்தில் மிதக்க அதன் மணம் மண்டையை குடைந்தது….

கட்டை பிரித்தவரிடம் யாரோ கத்தியை நீட்ட, அதை வாங்கி அல்வாவை வெட்டத்துவங்கிய போது அது நடந்தது..

அல்வா வில் கத்தி வெட்ட அடம்பிடித்தது, எவ்வளவோ முயற்ச்சித்தும் ஒரு சின்ன கீச்சல் கூட விழாமல், “சபைர் கிரிஸ்டல்’ கண்ணாடி பதித்த புதிய ரேடோ வாச்சியின் மேல் பாகம் போல அல்வாவின் மேல் பாகத்தில் கத்தி வழுக்கிக் கொண்டு போனது.

பலர் நான் வெட்டுகிறேன் பேர்வழி, என்று முயற்ச்சித்தும் முடியாமல் போனது.. ம்மம்மாவுக்கோ தர்ம சங்கடம் “பெண் வீட்டாரின் மூத்த குடிமகன் முதல் கடைசியாய அந்த அல்வாவை வாழையிலை கொண்டு மூடிய சமையல் ஆள் வரை திட்டி தீர்த்துவிட்டாள்….ம்..ஹீம்பிரயோஜமில்லை அல்வா உருளியை விட்டு வர மறுத்தது..

கடைசியாக மூன்று நான்கு கத்திகளை ஒடித்தும், இரண்டு மூன்று கரண்டிகளை வழைத்தும் அல்வா… கொடாக்கண்டனுக்கு விடாகண்டனாய் அப்படியே பழபழன்னு இரும்புக் கிண்ணம் மாதிரி ஒட்டிக்கிட்டிருக்கு உருளியில், ஆனா மணம் மட்டும் நாலூருக்கு அடிக்குது.

அப்போது தோன்றியதுதான் ம்மம்மாவுக்கு அந்த புத்தி! நான் இப்ப வாரேன் என்று எழுந்து போனவள் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்தது அவள் ஆசையாய் சம்மந்தி இடிக்க வைத்திருந்த அந்த செம்பு பூண் போட்ட “உலக்கை” .

கூட்டத்தில் சுற்றிச் சுற்றி பார்த்து கடைசியா, இரண்டு வருஷாமா ஜிம்மில் ஜம்ப் பண்ணுகிறேன்னு வீட்டில் வந்து எல்லா வெயிட்டான சாதனங்களையும் தூக்கி தூக்கி பாத்தும் பலம் போதாது என்று தினமும், ஆறு முட்டையும்,ஆறு கிளாஸ் பாலும் சாப்பிட்டு வீட்டு பட்ஜெட்டை வீணடிக்கிற கடைகுட்டி பேரனை அதுவரை கண்றாவியாய் பார்த்துக் கொண்ருந்த ம்மம்மா இவந்தான் இதுக்கு சரியான ஆள் என்று அவனிடம் உலக்கையை கொடுத்தாள்…

“மக்கா இந்த உருளியில் இருக்கும்அல்வா மேலே உன் பலமெல்லாம் கூட்டி ஒரு போடு போடு…” என்று ஆவேசமாய்ச் சொல்ல.

எதோ தன் விட்டில் அனைவருக்கும் தன் பலத்தை சாதனையாக்கிக் காட்ட வேண்டும் என்று கொஞ்ச நாளாய் காத்திருந்த அந்த கடைக்குட்டி பேரனுக்கு அடித்தது சான்ஸ்

எல்லோரையும் விலகிக் கொள்ளுங்கள் என்று சொல்லி, அவன் தகுதிக்குட்பட்ட எல்லா பந்தா வையும் காண்பித்து உலக்கையை ஓங்கி ஒரு போடு போட்டான் உருளியில் ஒட்டிக் கொண்டிருந்த அல்வாவின் மேல்… என்னவொரு அதிசயம்... ஆச்சரியம்.... உடைந்து சின்னா பின்னமானது........ஆனால்….

அது அல்வா......அல்ல....ம்மம்மாவுக்கு சம்மந்தி அரைக்கும் ”உலக்கை.”

No comments:

Post a Comment