பாலை வனத்தில்
பசுமை வயல் போல்...
சுடும் மணலில்
பனித் துளிபோல்..
பார் போற்றும்
பண்பின் வேந்தர்க்கு
மாந்தர் குலத்தை
சொர்க்கம் சேர்க்க
மெய்யான் அல்லாஹ்!
அருள்மறை தந்தான்
ஜிப்ரீல் வழியாய்
மாநபி பட்டமும்
கூடவே சார்த்தி….
தேர்வு செய்தான்
வல்லான் அல்லாஹ்!
ரமலான் மாதம்
பிந்திய பத்தில்
ஒற்றைப்படையில்
ஒரு நாள் அதுவை...
ஒரிறை பெயரில்
ஒதுக என்றார் ஜிப்ரில் வந்து
ஹீராக் குகையில்
வாசம் செய்த
உம்மியின் சொந்தம்
பண்பின் சிகரம்
ஒதுதல் என்பது
எப்படி சாத்தியம் என்றார்
அறிந்தவன் அல்லாஹ்!
அதைக் கற்றே கொடுத்தான்.
குளிரில் நடுங்கிய
குலக்கொழுந்து...
போர்த்தச் சொல்லி
குரலெழுப்ப
அவரில் பாதி...
போர்த்திய பொழுதில்
பொங்கி வந்தது
அருள்மறை வாக்கு “இக்ரஹ்”
பசுமை வயல் போல்...
சுடும் மணலில்
பனித் துளிபோல்..
பார் போற்றும்
பண்பின் வேந்தர்க்கு
மாந்தர் குலத்தை
சொர்க்கம் சேர்க்க
மெய்யான் அல்லாஹ்!
அருள்மறை தந்தான்
ஜிப்ரீல் வழியாய்
மாநபி பட்டமும்
கூடவே சார்த்தி….
தேர்வு செய்தான்
வல்லான் அல்லாஹ்!
ரமலான் மாதம்
பிந்திய பத்தில்
ஒற்றைப்படையில்
ஒரு நாள் அதுவை...
ஒரிறை பெயரில்
ஒதுக என்றார் ஜிப்ரில் வந்து
ஹீராக் குகையில்
வாசம் செய்த
உம்மியின் சொந்தம்
பண்பின் சிகரம்
ஒதுதல் என்பது
எப்படி சாத்தியம் என்றார்
அறிந்தவன் அல்லாஹ்!
அதைக் கற்றே கொடுத்தான்.
குளிரில் நடுங்கிய
குலக்கொழுந்து...
போர்த்தச் சொல்லி
குரலெழுப்ப
அவரில் பாதி...
போர்த்திய பொழுதில்
பொங்கி வந்தது
அருள்மறை வாக்கு “இக்ரஹ்”
ஹக்கவன் அல்லாஹ்!
தொடர்ந்தான்…தந்தான்...
”வஹி” யாய் வந்தது திருமறை...
புனிதம் பெற்றது
புண்ணியமாதம்
அது...
இறையச்ச தேர்வுக்கு
இறைவன் தேர்வு செய்த
ரமலான் மாதம்...
No comments:
Post a Comment