Wednesday, July 25, 2012

புனிதம் பெற்ற புண்ணிய மாதம்...


பாலை வனத்தில்
பசுமை வயல் போல்...
சுடும் மணலில்
பனித் துளிபோல்..
பார் போற்றும்
பண்பின் வேந்தர்க்கு

மாந்தர் குலத்தை
சொர்க்கம் சேர்க்க
மெய்யான் அல்லாஹ்
!
அருள்மறை தந்தான்
ஜிப்ரீல் வழியாய்
மாநபி பட்டமும்
கூடவே சார்த்தி
….

தேர்வு செய்தான்
வல்லான் அல்லாஹ்
!
ரமலான் மாதம்
பிந்திய பத்தில்
ஒற்றைப்படையில்
ஒரு நாள் அதுவை
...
ஒரிறை பெயரில்
ஒதுக என்றார் ஜிப்ரில் வந்து

ஹீராக் குகையில்
வாசம் செய்த
உம்மியின் சொந்தம்
பண்பின் சிகரம்
ஒதுதல் என்பது
எப்படி சாத்தியம் என்றார்
அறிந்தவன் அல்லாஹ்
!
அதைக் கற்றே கொடுத்தான்.

குளிரில் நடுங்கிய
குலக்கொழுந்து
...
போர்த்தச் சொல்லி
குரலெழுப்ப
அவரில் பாதி
...
போர்த்திய பொழுதில்
பொங்கி வந்தது
அருள்மறை வாக்கு
இக்ரஹ்

ஹக்கவன் அல்லாஹ்
!
தொடர்ந்தான்தந்தான்...
வஹியாய் வந்தது திருமறை...
புனிதம் பெற்றது
புண்ணியமாதம்
அது
...
இறையச்ச தேர்வுக்கு
இறைவன் தேர்வு செய்த
ரமலான் மாதம்
...

 

No comments:

Post a Comment