Sunday, October 14, 2012

வெளிச்சப் பூக்கள்….!!

சற்று முன்பு
கரண்டு வந்த போது

அவசரமாய் அணைக்கப்பட்ட
மெழுவர்த்திகள் தேடி
தத்தளித்துத் தட்டுத்தடுமாறி
பார்வையில்லாவதன் போல்
பரிதவித்து தீப்பட்டிகள் தேடி
தீக்குச்சுகள் பற்ற வைக்கும் போது
பார்வை வந்தது போல்
வந்து தொலைத்து கரண்டு...

எதற்க்கு வந்தாய் என
எக்காளமிட்டு கேட்டும் மனது
மாய்ந்து போகிறது நிமிடங்களில்
வெளிச்சப்பூக்களின் சவுந்தர்யத்தில்
மிளிரும் கூட்டப்படாத
அறையின் அழகில்...

எல்லாம்… எல்லாம்
இனி கொஞ்ச நேரம்தான்
இனி கூட்டி மெருகேற்ற
இருட்டில் தொலைந்த
கண்ணாடி கவர் முதல்
கழற்றி வைத்த சிம் கார்ட்வரை
தேடிக் காண்பது
ஒரு மெகா சீரியலின் ”முற்றும்”
போலாகிவிட்டது

தும்மிவிட்டு
தலை நிமிரும் போது
கண்பார்வை போய்விட்டதாய்
கர்ண கொடுரமாய்
பயப்பட்டு நிக்கும் போது
மனது நிதானிக்கிறது
கரண்டு போய்விட்டது என்று...

தொலைந்து போனவன்
திடிரென வந்துவிட்டான்
பூச்சூடி புத்தாடை உடுத்து
புன்னகை கொள்ள முடியாமல்
இனி எப்ப தொலைவானோ என்று
தொங்கும் பயத்தில்
இருண்டு கிடக்கிறது முகம்

காற்றுப்புக முடியாத
இறுக்கங்களில் தூங்கவும்
வறுத்தரைக்காமல்
கறிகள் வைக்கவும்
தண்ணீர் நிரப்பப்படாத
டேங்களில் குளிக்கவும்
கசங்கிய துணியுடன்
அலுவலகம் செல்லவும்
டிவி சீரியல்கள் இல்லாமல்
அழுது புலம்பவும்
இருட்டில் சமைக்கவும்
கும்மிருட்டில் சாப்பிடவும்
கற்றுக் கொண்டோம்.


நிரந்த இருளில் இனி
என் நாடு என்பது எனக்கு
புதிய சொல்லல்ல…!!!
அது பழகிப்போன
பாலடைச் சட்டிமாதிரி

பார்வையிழந்தவன் போல்
பார்க்கப் பழகியாகிவிட்டது - இனி
கண்ணாடிகள் வேண்டாம்
தூரப் பார்வைக்கும்
கிட்டப் பார்வைக்கும்


அரசாங்கம் கண்ணையும்
பறிக்காமல் இருப்பதற்க்காக
இறைவனுக்கு நன்றி
சொல்லிவிட்டு…

மிதமுள்ள வாழ்க்கையை
வியர்வை நாற்றங்களிலும்
வியர்ப்பு முட்டல்களிலும்தான்
சல்லாபமும், சங்கடங்களும் - என்று
இருட்டில் வாழ்ந்து தொலைப்போம்.

No comments:

Post a Comment