Wednesday, July 25, 2012

குடி கலாச்சாரம்..


தடம் புரண்ட பாதைகள்..
அதை சரி வைக்கும்
பாத சாரிகள்..

முன்னேயும் 
பின்னேயும் 
மறந்து
குட்டையில் 
விழுந்து எழும்
குடி கலச்சாரம்
கொள்கை என்று
ஆனபிறகு....

வாந்தியை நக்கும் நாய்
தன் வாயையும்
நக்கில் செல்கிறது
என்பதுகூட 
தெரியாமல்
வீழ்ந்து கிடங்கும்
வீணாய்ப் போனவர்கள்...

அது சாக்கடையானலென்ன
சகதிக் கடையானாலென்ன்..
ஓரோ குட்டையில் 
தன்னோடு ஊற...
எருமை மாடுகள்
வேண்டும் என்று
அடம்பிடிக்கும் மனசு

அதுக்குத் தெரியுமா
கற்பூர வாசனை
பளிங்குத் தரையில்
விட்டாலும்
பழகியது 
மண் தரைதான்
அதன் நாட்டமும் 
அதிலேதான்...

இது மேல்தட்டுமனசு
என மேன்மை கொள்ளும்
இன்றைய இளவல்கள்...
முக்காலும் மூழ்கியபின்
இனி தொலைப்பதற்க்கு
வாழ்க்கை என்பதில்லை
என்று முழுதாய்த் தொலைக்கும் முன்
உணர்ந்து எழுங்கள்
மனிதானாய் வாழுங்கள்...

No comments:

Post a Comment