Sunday, November 18, 2012

இலக்கை நோக்கிய ஓட்டம்!

கால் போன போக்கிலே
நடந்து கொண்டிருந்தேன்...

வலிகள் தாளாமல்
திரும்பிப்பார்ததபோது
தன்னைச் சுற்றி
ஒரு வரண்டு பரந்த நிலம்
தனி மரமாய் நான் மட்டும்

தொண்டை வரண்டதால்
மண்டை சொல்கிறது
தண்ணீர் ஊற்றித் தணிக்க..
கால்கள் வலிக்க
அங்கும் இங்கும் ஓடுகிறேன்
கண்ணீர் மட்டுமே மிஞ்சியது...

காரணம் அறிந்து கொண்டேன்!
கால் போன போக்கிலே
இலக்கில்லாமல் வந்ததால்
இலகுவாய் வந்த வினையுது

மனம் போன போக்கிலே
வேகமாய் ஓடினாலும்
கஷ்டம் என்பது
கூடவே கலந்து நடந்தாலும்
மனம் நாடிய இடம்
வந்து தொலைத்திருக்கும்
அதில் ஒரு வெற்றி!
ஓழிந்திருந்திருக்கும்....

No comments:

Post a Comment