Wednesday, November 28, 2012

சிறைப்படுத்தும் சின்ன நூற்கண்டு..

அழகான ரோடுகளும்
அங்காங்கே வழிகாட்ட
போர்டுகளும் இருக்குமென்றால்
எவ்வளவு நன்றாக இருக்கும்
வாகன ஓட்டுனர்களுக்கு

வாழ்க்கையுலும்
இலகுவான கிடைத்தல்களும்
வழிகாட்ட மனிதர்களும்
உண்டெண்டால்
வளமாய் வாழலாம்தான் - ஆனால்
அதில் ஆச்சர்யப்படும்
ஆனந்தமிருக்காது

முட்களும் கற்களும்
வாரியிறைக்கப்பட்ட
பாதைகளில் நடக்கத்
தெரியவில்லை என்றால்
வெற்றி என்பது விலகியே
இருக்கும்....

வீட்டில் மூலைகளில்
முடங்கிக் கிடந்தால்
வம்பும் தும்புமில்லை
பொதுவில் வந்து
பொதுநலம் என்றால்
தலையில் விடியும்
விமர்சன வெடிகள்

விமர்சனங்களும்
வீண் பழிகளும்
புகழாரங்களும்
வடங்களாய் நம்மை
வரிந்து கொண்டால்
வாழ்க்கை என்பதில்
சாதனைகளில்லை..
நூற்கண்டுகளா என்னைச்
சிறைப் படுத்துவது - என
அறுத்து எறிந்து விட்டு
சவால்களை சந்திப்போம்..

சரிந்த போதெல்லாம்
சாய்ந்து கொள்ள
தோள்களில்லாமல்
தன்னந்தனியாய்
தவழ்ந்து நடந்து
குருதிக் கால்களும்
வியர்வை தேகங்களூம்
மூச்சு முட்டல்களிலும்
முழுதாய் வெற்றி வரும் போது
அறிந்து கொள்ளலாம் - அது
எத்தனை ஆனந்தமானது என்று...

வீசியெறியப்பட்ட
பழங்களின் சுவை
தின்பவனின் பசியில்..
விதைத்து தெளித்து
கொய்யப்பட்ட கனிகளில்
தித்திக்கும் சுவை...

வெற்றிகளின் கர்வத்தை
தலையிலேற்றாமல்
மனதில் மட்டும் மகிழ்ந்து
அது இறைவனின்
அருட் கொடை என - அவனுக்கு
நன்றி சொல்லி விட்டு
மீண்டும் துவங்குவோம்..!

No comments:

Post a Comment